sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கார்த்திகை மாதம் பிறப்பு சபரிமலை யாத்திரைக்கு மாலையணிந்த பக்தர்கள்

/

கார்த்திகை மாதம் பிறப்பு சபரிமலை யாத்திரைக்கு மாலையணிந்த பக்தர்கள்

கார்த்திகை மாதம் பிறப்பு சபரிமலை யாத்திரைக்கு மாலையணிந்த பக்தர்கள்

கார்த்திகை மாதம் பிறப்பு சபரிமலை யாத்திரைக்கு மாலையணிந்த பக்தர்கள்


ADDED : நவ 17, 2024 02:17 AM

Google News

ADDED : நவ 17, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, நவ. 17-

கார்த்திகை மாதம் துவக்க நாளில் மாலையணிந்து விரதம் மேற்கொண்டு, சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு பக்தர்கள் செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை, 5:00 மணிக்கு கிருஷ்ணகிரி - சேலம் சாலையிலுள்ள ஐயப்பன் கோவிலில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்தனர். கோவிலில் குருசாமிகள், பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்தனர்.

மாலையணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள், தினமும் காலை, மாலை நேரங்களில் நீராடி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வர். ஏராளமான பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி, விரதம் மேற்கொள்வர். இதையொட்டி, ஐயப் பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தன. நேற்று, 600க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலையணிந்து கொண்டனர். கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவிலில், 37ம் ஆண்டு மண்டல பூஜை வருகிற டிச., 20 முதல், 26 வரை நடக்கிறது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, 2025ம் ஜன., 1ல், சிறப்பு பூஜைகள் மற்றும் விசேஷ வழிபாடுகள் நடக்கவுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us