ADDED : ஏப் 26, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், செம்பரசனப்பள்ளி கிராமத்தில், ஒன்றிய பொது நிதியில் இருந்து, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
இப்பணியை, சூளகிரி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் லாவண்யா ஹேம்நாத் நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மது, முன்னாள் கவுன்சிலர்கள் நாகேஷ், பாக்கியவதி, முன்னாள் பஞ்., தலைவர் சீனிவாசன்
உட்பட பலர் பங்கேற்றனர்.