sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'வெள்ள பாதிப்பு பற்றி இ.பி.எஸ்., பேசுவது அண்ணார்ந்து பார்த்து துப்புவதாக உள்ளது'

/

'வெள்ள பாதிப்பு பற்றி இ.பி.எஸ்., பேசுவது அண்ணார்ந்து பார்த்து துப்புவதாக உள்ளது'

'வெள்ள பாதிப்பு பற்றி இ.பி.எஸ்., பேசுவது அண்ணார்ந்து பார்த்து துப்புவதாக உள்ளது'

'வெள்ள பாதிப்பு பற்றி இ.பி.எஸ்., பேசுவது அண்ணார்ந்து பார்த்து துப்புவதாக உள்ளது'


ADDED : டிச 06, 2024 07:55 AM

Google News

ADDED : டிச 06, 2024 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ''நீர்நிலை ஆக்கிரமிப்பு, வெள்ள பாதிப்பு ஆக்கிரமிப்பு பற்றி, இ.பி.எஸ்., பேசுவது, அண்ணார்ந்து பார்த்து துப்புவது போன்றது,'' என, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தி.மு.க., பிரமுகர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது: 'பெஞ்சல்' புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், 3 லட்சம் ஹெக்டேரில் வேளாண் பயிர்கள் நீரால் சூழப்பட்டுள்ளன. வேளாண் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, பாதிப்புகளை கணக்கெடுத்து வருகின்றனர். முடிவில் இது சற்று கூடலாம் அல்லது குறையலாம். வயல்களில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, வெள்ளத்தடுப்பு பணியில் மெத்தனம் என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசி வருவது அண்ணார்ந்து பார்த்து துப்புவது போன்றது. ஏனெனில், தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் தான் ஆகிறது. அதற்கு முன்னர், 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது, அ.தி.மு.க., தான். நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதும் அப்போதுதான். அவற்றை அகற்ற நீதிமன்றம் அளித்த தீர்ப்புபடி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம்.

வெள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய அரசு குழுவும் பார்வையிட்டு ஆய்வை துவக்கி உள்ளனர். பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணி முடிவில், நிவாரணம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார். தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் மதியழகன், பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் உடனி ருந்தனர்.






      Dinamalar
      Follow us