sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

 குடும்பத்துடன் ஊரை விட்டு ஒதுக்கியதாக விவசாயி புகார்

/

 குடும்பத்துடன் ஊரை விட்டு ஒதுக்கியதாக விவசாயி புகார்

 குடும்பத்துடன் ஊரை விட்டு ஒதுக்கியதாக விவசாயி புகார்

 குடும்பத்துடன் ஊரை விட்டு ஒதுக்கியதாக விவசாயி புகார்


ADDED : நவ 13, 2025 02:34 AM

Google News

ADDED : நவ 13, 2025 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: வாங்காத கடனுக்கு, தன்னையும், குடும்பத்தையும், ஊரை விட்டு ஒதுக்கி வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளதாக, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், விவசாயி நேற்று புகார் மனு அளித்துள்ளார்.

விவசாயி பெருமாள், 45, என்பவர் தெரிவித்துள்ளதாவது:

கிருஷ்ணகிரி அடுத்த பூவத்தி பஞ்., கெட்டூரில், மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கிறேன். என் அண்ணன் வாங்கிய கடனை, நான் அடைக்கக்கூறி, எங்கள் ஊர் பெரியவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து, '75,000 ரூபாய் கொடுத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்' என்றனர்.

அதை பெற்றுக்கொண்ட பின், மேலும், 75,000 ரூபாய் கொடுக்க தொல்லை கொடுத்தனர். எங்களால் தர முடியவில்லை.

இதனால் குடும்பத்தை, 8 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். எங்கள் குடும்பத்தின் சுப, துக்க நிகழ்ச்சிகள் போன்றவற்றில் யாரும் பங்கேற்பதில்லை. இதை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us