sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

துவரைக்கு மானியம் வழங்கவில்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை

/

துவரைக்கு மானியம் வழங்கவில்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை

துவரைக்கு மானியம் வழங்கவில்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை

துவரைக்கு மானியம் வழங்கவில்லை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை


ADDED : நவ 23, 2024 01:37 AM

Google News

ADDED : நவ 23, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துவரைக்கு மானியம் வழங்கவில்லை

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி, நவ. 23-

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சரயு தலைமையில், நேற்று விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது.

இதில் விவசாயிகளின், கேள்விக்கு அதிகாரிகள் அளித்த பதில் விபரம்:

விவசாயி செந்தில்குமார்: துவரை மானியம் இதுவரை கிடைக்கவில்லை. வேளாண் துறை, விவசாயிகளுக்கு உதவி செய்ய மறுக்கிறது.

மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன்: பில் ஸ்கேன் செய்து அனுப்புவதில் தாமதம் ஆகிறது. விரைவில் பெற்று தரப்படும்.

அன்பழகன்: என்.தட்டக்கல் பள்ளி வளாகத்தில் குரங்குகள் தொல்லை அதிகம் உள்ளது.

மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி: விரைவில் கூண்டு வைத்து குரங்குகள் பிடிக்கப்படும்.

சிவகுரு: தமிழகத்தின் இரண்டாவது பெரிய போச்சம்பள்ளி வாரச்சந்தை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கழிப்பறை கட்டி திறக்கவில்லை.

கலெக்டர் சரயு: அதிகாரிகள் சந்தையை ஆய்வு செய்து அறிக்கை கொடுங்கள்.

கிருஷ்ணசாமி: பெரியதள்ள பாடி ரெட்டிவலசை கிராமத்தில் உள்ள புதிய ஏரியின் கரையை உயர்த்தி, அகலப்படுத்த வேண்டும்.

கலெக்டர்: திட்டம் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் கரை உயர்த்தப்படும்.

நசீர் அகமது: ராயக்கோட்டை சாலையில், கே.ஆர்.பி., அணையின் பின்பக்கம், 40 லோடு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

கலெக்டர்: கழிவுகளை அகற்றி வருகிறோம். வேறு இடம் பார்த்து கழிவுகள் கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமகவுண்டர்: பையூர் மண்டல ஆராய்ச்சி மையத்தில் புதிய நெல் ரகங்களை ஏன் ஆய்வு செய்யவில்லை.

பையூர் நெல் ஆய்வாளர் கீதா: தமிழகத்தில், எட்டு இடங்களில் நெல் ஆய்வு செய்யப்படுகிறது. அவர்கள், 11 புதிய நெல் ரகங்களை ஆய்வு செய்து கொடுத்துள்ளனர். விவசாயிகள் நேரில் வந்து உங்களுக்கு தேவையான நெல் ரகங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us