/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களுக்கு அபராதம்
/
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களுக்கு அபராதம்
ADDED : டிச 24, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், டிச. 24-
அரூரில், நான்குரோடு, திரு.வி.க., நகர், கச்சேரிமேடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் முன், 4 வழிச்சாலையின் இருபுறமும், வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நடந்து செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.
எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், போக்குவரத்து நெரிசலை
கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட, பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.