ADDED : ஏப் 13, 2025 04:36 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் கடந்த, 4 தினங்களாக காலையில் வெயிலும், மதியத்திற்கு மேல் மழையும் பெய்து வரு-கிறது. நேற்று மாலை, 4:00 மணி முதல், கிருஷ்ணகிரியில் சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது துாரல் விழுந்த போதும், கனமழை பெய்யவில்லை.
அதேபோல காவேரிப்பட்டணம், பர்கூர் சுற்றுவட்டாரத்திலும் மிதமான மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு காவேரிப்பட்-டணத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையோர பேனர்கள் விழுந்தன. தாம்சன்பேட்டையில் ஒரு மரமும், மின் கம்பங்களும் விழுந்தன. மோரனஹள்ளி அடுத்த எஸ்.எஸ்.கொட்டாய் சாலையில் ஒரு டிரான்ஸ்பார்மர் விழுந்ததால், அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் மின்சாரம் இல்-லாமல் தவித்தனர். நேற்று காலை முதல் பணிகள் துவங்கப்பட்டு மின் வினியோகம் சீர் செய்யப்பட்டது.

