/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் மலைக்கோவில் உண்டியல் திறப்பு ரூ.24.10 லட்சம் காணிக்கை வசூல்
/
ஓசூர் மலைக்கோவில் உண்டியல் திறப்பு ரூ.24.10 லட்சம் காணிக்கை வசூல்
ஓசூர் மலைக்கோவில் உண்டியல் திறப்பு ரூ.24.10 லட்சம் காணிக்கை வசூல்
ஓசூர் மலைக்கோவில் உண்டியல் திறப்பு ரூ.24.10 லட்சம் காணிக்கை வசூல்
ADDED : நவ 26, 2025 01:46 AM
ஓசூர், ஓசூர் மலைக்கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்தியிருந்த, 24.10 லட்சம் ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் வளாகத்தில், பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, 8 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்., மாதம் கடைசியாக உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. கோவில் உண்டியல்கள் நிரம்பிய நிலையில், தர்மபுரி ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் மகாவிஷ்ணு முன்னிலையில், 8 உண்டியல்களும் நேற்று காலை, 'சீல்' அகற்றப்பட்டு திறக்கப்பட்டன.
அவற்றில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கைகளை, ஓசூர் அதியமான் கல்லுாரி மாணவ, மாணவியர், 103 பேர் மற்றும் பக்தர்கள், கோவில் ஊழியர்கள் என, 120 பேர் எண்ணினர். 8 உண்டியல்களில் மொத்தம், 24 லட்சத்து, 10,654 ரூபாய் இருந்தன. அதேபோல், 12 கிராம் தங்கம், 149 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோவில் செயல் அலுவலர் சின்னசாமி, ஆய்வாளர்கள் சக்தி, ராமமூர்த்தி ஆகியோர், உண்டியல் எண்ணும் பணியை கண்காணித்தனர்.

