sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கள்ளக்காதலை கைவிடாததால் ஆத்திரம் மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது

/

கள்ளக்காதலை கைவிடாததால் ஆத்திரம் மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது

கள்ளக்காதலை கைவிடாததால் ஆத்திரம் மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது

கள்ளக்காதலை கைவிடாததால் ஆத்திரம் மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது


ADDED : பிப் 16, 2024 09:58 AM

Google News

ADDED : பிப் 16, 2024 09:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அடுத்த சிச்சிருகானப்பள்ளியை சேர்ந்தவர் எல்லண்ண கவுடா, 50; இவர், காஸ் டேங்கர் லாரி டிரைவர். இவர் மனைவி கவுரம்மா, 40; இவர், அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். எல்லண்ண கவுடா, தன் மனைவி கவுரம்மா பணியாற்றும் பள்ளியில், சில ஆண்டுகளுக்கு முன் டிரைவராக பணியாற்றினார். அப்போது கவுரம்மாவிற்கும், பள்ளியின் போக்குவரத்து பிரிவு மேற்பார்வையாளர் அருண் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததை அறிந்து கவுரம்மாவை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, பள்ளி பஸ் டிரைவர் மகேஷ், கவுரம்மாவை பஸ்சில் அழைத்துக் சென்றுள்ளார். இதை கவனித்த எல்லண்ண கவுடா, டேங்கர் லாரியில், மனைவி சென்ற பஸ்சை பின் தொடர்ந்தார். சிச்சிருகானப்பள்ளியிலுள்ள பேட்டரி கம்பெனி அருகே பள்ளி வாகனத்தின் மீது, டேங்கர் லாரியால் மோதினார். இதில், பள்ளி வாகனம் சேதமடைந்தது. இது குறித்து, கவுரம்மா புகார் படி, பாகலுார் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து, எல்லண்ண கவுடாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us