ADDED : டிச 22, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு
ஓசூர், டிச. 22-
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், நெரிகம் பஞ்., உட்பட்ட சென்னசந்திரம் கிராமத்தில், வேப்பனஹள்ளி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதை நேற்று திறந்து வைத்த வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ., முனுசாமி, பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற ரேஷன் பொருட்களை வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் பாபு வெங்கடாசலம், இம்மிடிநாயக்கனப்பள்ளி பஞ்., தலைவர் மல்லையன், அ.தி.மு.க., சூளகிரி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வம், சூளகிரி பஞ்., தலைவர் கலைச்செல்வி ராமன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.