/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேல்முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
/
வேல்முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
ADDED : நவ 03, 2024 01:28 AM
ஓசூர், நவ. 3-
ஓசூர் பெரியார் நகர் வேல்முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது. காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து யாக சாலை பூஜை, நவகலச பூஜை, ஹோமங்கள், மாலை, 5:00 மணிக்கு சுப்பிரமணிய சஹஸ்ரநாம அர்ச்சனை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வரும், 6 மாலை, 5:30 மணிக்கு சக்தி வேல் வாங்குதல் மற்றும் 7 மதியம், 3:30 மணிக்கு சூரசம்ஹாரம், 8 மதியம், 2:00 மணிக்கு வள்ளி, தெய்வானை வேல்முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.