sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூரில் பாதாள சாக்கடை திட்ட பணி ஆய்வு

/

ஓசூரில் பாதாள சாக்கடை திட்ட பணி ஆய்வு

ஓசூரில் பாதாள சாக்கடை திட்ட பணி ஆய்வு

ஓசூரில் பாதாள சாக்கடை திட்ட பணி ஆய்வு


ADDED : மே 03, 2025 01:17 AM

Google News

ADDED : மே 03, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:ஓசூரில், பாதாள சாக்கடை திட்ட பணிகளை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள, 45 வார்டுகளில், 20 வார்டுகளில் முழுமையாகவும், 15 வார்டுகளில் பகுதியாகவும், 582.54 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை உணவு பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று ஆய்வு செய்தார். ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகே தினமும், 20.133 எம்.எல்.டி., நீரை சுத்திகரிப்பு செய்யவும், சாந்தபுரம் ஏரி அருகே, 12.51 எம்.எல்.டி., நீரை சுத்திகரிப்பு செய்யவும் அமைக்கப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தை பார்வையிட்டார். மேலும், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கான தடவாள பொருட்கள், திட்ட அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

முன்னதாக, ஓசூர் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, ''பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், பூமிக்கடியில் உள்ள குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படாதவாறும், பாதாள சாக்கடை பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும்,'' என, அரசு அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.

மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, கமிஷனர் மாரிச்செல்வி, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், ஓசூர் சப்கலெக்டர் பிரியங்கா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us