sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

/

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்


ADDED : மார் 01, 2024 02:13 AM

Google News

ADDED : மார் 01, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி சி.இ.ஓ., அலுவலகம் முன்பு, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், தி.மு.க., அரசு தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி கடந்த, 26 முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது: தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, 3 நபர் ஊதியக் குழு அமைத்து அரசாணை வெளியிட்டனர். 3 நபர்கள் குழுவின் அறிக்கையை விரைவாக பெற்று, 13 ஆண்டுகால இடைநிலை ஆசிரியர்களின் வேதனையை களைய வேண்டும். 2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம், 8,370 ரூபாய் என்றும், பின்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு, 5,200 ரூபாய் என்றும், சம வேலைக்கு, சம ஊதியம் என்பதை நிராகரித்து, 2 விதமான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. எனவே, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, இடைநிலை ஆசிரியர்களுக்கு, 'சம வேலைக்கு சம ஊதியம்' என அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

இதில், மாவட்ட தலைவர் கணேஷ், பொருளாளர் முனியசாமி உள்பட, 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us