/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒரு மலர் கூட ஏற்றுமதி செய்யாத சர்வதேச மலர் ஏல மையம் லைசென்ஸ் பெறாத அரசு; இடைத்தரகர் பிடியில் விவசாயிகள்
/
ஒரு மலர் கூட ஏற்றுமதி செய்யாத சர்வதேச மலர் ஏல மையம் லைசென்ஸ் பெறாத அரசு; இடைத்தரகர் பிடியில் விவசாயிகள்
ஒரு மலர் கூட ஏற்றுமதி செய்யாத சர்வதேச மலர் ஏல மையம் லைசென்ஸ் பெறாத அரசு; இடைத்தரகர் பிடியில் விவசாயிகள்
ஒரு மலர் கூட ஏற்றுமதி செய்யாத சர்வதேச மலர் ஏல மையம் லைசென்ஸ் பெறாத அரசு; இடைத்தரகர் பிடியில் விவசாயிகள்
ADDED : ஜன 18, 2025 02:28 AM
ஓசூர்: ஓசூர் அருகே, 20.20 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள
சர்வதேச மலர் ஏல மையம் கடந்த, 3 ஆண்டுகளை கடந்தும் விவசாயிகளுக்கு பயனில்லாமல் உள்ளது. ஏற்றுமதி செய்வதற்-கான லைசென்சை கூட அரசு இன்னும் பெறவில்லை. இதனால் இடைத்தரகர்கள் பிடியில் விவசாயிகள் சிக்கியுள்ளனர்.
தமிழக எல்லையான ஓசூர் ரோஜா நகரம் என அழைக்கப்படுகி-றது. இங்கு ரோஜா, ஜெர்புரா, கார்னேசன், கிரசாந்திமம் உள்-ளிட்ட கொய்மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதுதவிர திறந்த வெளியில் மலர் சாகுபடி மேற்கொள்ளப்படுகி-றது. ஆண்டுக்கு, 45,000 மெட்ரிக் டன் மலர்கள் உற்பத்தி செய்-யப்படு
கிறது. அவற்றை, பெங்களூரு ஏல மையத்திற்கு கொண்டு சென்று தான், விவசாயிகள் வெளிநாடு
களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
காதலர் தினம், புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் அதிகளவில் வெளிநாடு
களுக்கு மலர்கள் ஏற்றுமதியாகும். இதில் இடைத்தரகர்கள் தலை-யீடு அதிகமாக இருந்தது. அதனால் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல், வெளிநாடுகளுக்கு மலர்களை ஏற்றுமதி செய்யும் வகையில், நெதர்லாந்து நாட்டில் இருப்பது போல், சர்வதேச மலர் ஏல மையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஏல மையம் திறப்பு
இதையேற்று கடந்த
அ.தி.மு.க., ஆட்சியில், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையோரம், 20.20 கோடி ரூபாய் மதிப்பில், 7.63 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச மலர் ஏல மையம் கட்டப்
பட்டது. கடந்த, 2021 நவ., 1 ல், கட்டுமான பணிகள் நிறைவு பெற்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின், 2022 ஜன., 8 ல், சர்வ-தேச மலர் ஏல மையத்தை திறந்து வைத்தார்.
இந்த மையத்தில், 2,000 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு, குளிர்ப-தன கிடங்கு, ஏல மையம், தரம் பிரிப்பு கூடம், 16 கடைகள், கூட்ட அரங்கம், பயிற்சி அரங்கம் என மொத்தம், 67,000 சதுர அடியில் கட்டுமான பணிகள் நடந்துள்ளன. இந்த மலர் ஏல மையம் மூலம், விவசாயிகள் தங்களது கொய்மலர்களை குளிர்ப-தன கிடங்குகளில் சேமிக்கலாம். ஆனால், 3 ஆண்டுகளை கடந்தும், சர்வதேச மலர் ஏல மையம் முழு வீச்சில் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. அதனால் விவசாயிகள் இடைத்த-ரகர்
களிடம் தங்களது லாபத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
16 லட்சம் மலர்கள்
இது தொடர்பாக, தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குனர் பால-சிவப்பிரசாத் கூறியதாவது:
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், வேலுார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த
விவசாயிகள் மற்றும் ஓசூரில், 2,500 ஏக்கரில் உள்ள பசுமை குடில் கொய்மலர்கள், 25,000 ஏக்கரில் உள்ள திறந்த வெளி மலர்கள் பயன்பெறும் வகையில், சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்பட்டது. இங்கு அதிகப்பட்சம், 15 அதிகாரிகள் வரை நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இன்று, 3 பேர் மட்டுமே உள்-ளனர். இந்த, 3 ஆண்டுகளில், 16,000 லட்சம் மலர்கள் மட்-டுமே, இந்த ஏல மையம் மூலம் விற்பனை
செய்யப்பட்டுள்ளன.
ஒரு மலர் கூட ஏற்றுமதி
செய்யப்படவில்லை. 16 லட்சம் மலர்கள் என்பது, ஒரு ஏக்கரில் மூன்று ஆண்டுகளில் பெறக்கூடிய மலர்களின் எண்ணிக்கை-யாகும். இப்படி மிக குறைந்த அளவில் மட்டுமே ஏல மையம் மூலம் விற்பனை நடந்துள்ளது. தி.மு.க., அரசு மலர் விவசாயிக-ளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆண்டுக்கு, 3 முதல், 4 லட்சம் சதுர மீட்டர் அளவிற்கு பசுமை குடில்களுக்கான மானியம் தேவை இருந்தும், 30,000 சதுர மீட்டருக்கு மட்டுமே கொடுத்துள்ளனர். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மலர் ஏல மையத்தை நடத்த ஆர்வம் காட்டவில்லை. இதனால் மலர்களுக்கு உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் அடிமட்ட விலைக்கும், இடைத்தரகர்களிடமும் விற்க வேண்டிய நிலை உள்ளது.
சர்வதேச மலர் ஏல மையத்திற்கு ரோஜா, ஜெர்புரா, கிரசாந்திமம் உள்ளிட்ட அனைத்து விதமான கொய்மலர்களை கொண்டு வந்தால் கூட, அவற்றை வாங்குவதற்கு போதிய வணிகர்கள் வரு-வதில்லை. சர்வதேச ஏல மையம் என கூறி விட்டு, ஏற்றுமதி வாய்ப்பு களை ஏற்படுத்தாமல், உள்ளூர் வணிகர்கள் ஒரு சிலர் மட்டுமே கொய்மலர்களை வாங்க வருகின்றனர். அவர்களும் முழுமையாக மலர்களை வாங்குவதில்லை. நேரடியாக விவசாய நிலத்திலேயே கொய்மலர்களை வணிகர்கள் வாங்கி விடுகின்-றனர்.
ஏற்றுமதி லைசென்ஸ்
ஏற்றுமதி வாய்ப்பு ஏற்படுத்தாமல், சர்வதேச ஏல மையத்திற்கு மலர்களை கொண்டு வருமாறு கூறினால் விவசாயிகள் எப்படி கொண்டு வருவர். தி.மு.க., அரசு விவசாயிகளின் மலர்களை ஏற்-றுமதி செய்ய இன்னும்,
'ஐ.இ.சி., கோடு' என்ற ஏற்றுமதி லைசென்சை கூட பெற-வில்லை. ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால், புகையூட்டம் எனப்படும் ஒட்டுண்ணி மற்றும் தொற்றுயிரின கட்டுப்பாட்டு முறைகளை செய்ய வேண்டும். அதை கூட ஏற்றுமதி மையத்தில் அரசு செய்யவில்லை. விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு, வரும் காதலர் தினத்திற்கு முன்பாக, முழு கொள்ளளவில் மலர் ஏல மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.