/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் 53 நாட்களாக 50 அடிக்கு மேல் நீர் இருப்பு
/
கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் 53 நாட்களாக 50 அடிக்கு மேல் நீர் இருப்பு
கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் 53 நாட்களாக 50 அடிக்கு மேல் நீர் இருப்பு
கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் 53 நாட்களாக 50 அடிக்கு மேல் நீர் இருப்பு
ADDED : டிச 02, 2024 02:41 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் கடந்த ஜூலை 26 முதல், 28 வரை, 3 நாட்கள், 51 அடியாக இருந்தது. ஜூலை 29ல், 50.90 அடியாக நீர்மட்டம் குறைந்த நிலையில், செப்., 10 வரை தொடர்ந்து, 44 நாட்களாக நீர்மட்டம், 50 அடியாக இருந்-தது. பிறகு மழையின்றி நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில், 28 நாட்களுக்கு பிறகு அக்., 9ல் அணை நீர்மட்டம் மீண்டும், 50 அடியை எட்டியது. பின்னர் அவ்வப்போது பெய்து வரும் மழையால் தொடர்ந்து நேற்று வரை, 53 நாட்களாக அணையில் நீர் இருப்பு, 50 அடிக்கு மேல் உள்ளது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த மாதம், 25 முதல் நேற்று முன்தினம் வரை நீர்வரத்து தலா, 436 கன அடியாக இருந்-தது. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த, 2 நாட்களாக பெய்து வரும் மழையால் நேற்று நீர்வரத்து, 499 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து இடது மற்றும் வலது-புற கால்வாயில், 178 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 258 கன அடி என மொத்தம், 436 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.50 அடி-யாக நீர்மட்டம் இருந்தது. அணையில், 50 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்
பட்சத்தில், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்