sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சுமை துாக்கும் தொழிலாளர் 'ஸ்டிரைக்'

/

சுமை துாக்கும் தொழிலாளர் 'ஸ்டிரைக்'

சுமை துாக்கும் தொழிலாளர் 'ஸ்டிரைக்'

சுமை துாக்கும் தொழிலாளர் 'ஸ்டிரைக்'


ADDED : நவ 27, 2025 01:52 AM

Google News

ADDED : நவ 27, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சுமை துாக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜன்

கூறுகையில், “வருகை பதிவேட்டில் பெயர் இல்லாமல் பணி செய்யும் தொழிலாளர்களின் பெயர்களை உடனே வருகை பதிவேட்டில் பெயரை சேர்க்க வேண்டும். 2022ல், 10 ஆண்டுகள் பணி முடிந்த தொழிலாளர்களுக்கு பச்சை அட்டையை, 2025ல் முடிய உள்ளதால், முன் தேதியுடன் வழங்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த, 6 ஆண்டுகளாக கேட்டும், தமிழக அரசு மவுனம் சாதிக்கிறது. எனவே

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (நேற்று) முதல் சுமை துாக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.

இதே‍போல், போச்சம்பள்ளி, தேன்

கனிக்கோட்டை மற்றும் தர்மபுரி மாவட்டம் கடத்துார் அடுத்த ஓசஹள்ளி ஊராட்சியிலுள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கிலும் சுமை துாக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.






      Dinamalar
      Follow us