ADDED : பிப் 10, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: சூளகிரி வி.ஏ.ஓ., கோவிந்தம்மாள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், சூளகிரி - உத்தனப்பள்ளி சாலையிலுள்ள வேளாண் அலுவலகம் அருகே, வாகன சோதனை செய்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, ஒரு யூனிட் எம்.சாண்ட் கடத்தி செல்வது தெரிந்தது. இதனால் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், லாரி டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.