ADDED : ஜூலை 26, 2026 02:22 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளப்பிரிவு அலுவலர்கள் மற்றும் வருவாய்துறையினர் நேற்று முன்தினம் பர்கூர் சுற்றுவட்டார பகு-திகளில் ரோந்து சென்றனர். சிகரலப்பள்ளி, அடுத்த தம்மண்ண கவுண்டனுார் அருகே நின்ற ஒரு லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது.
இது குறித்து சிகரலப்பள்ளி வி.ஏ.ஓ., முனீர் அளித்த புகார் படி, பர்கூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, உரிமையாளரான திருப்பத்துார் மாவட்டம், பத்ரிகானுாரை சேர்ந்த கோவிந்தராஜ், 52, என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
