ADDED : ஜூலை 26, 2026 02:27 AM
அ நிறம் | அளவு
பேரிகை: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த புக்கசாகரம் வி.ஏ.ஓ., வென்மதி மற்றும் வருவாய்த்துறையினர், புக்கசாக-ரத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், புக்கசாகரத்திலிருந்து காமன்தொட்டிக்கு, 2 யூனிட் எம்.சாண்டை கொண்டு செல்வது தெரிந்தது.லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், பேரிகை ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., வென்மதி புகார்படி, லாரி டிரைவரும், உரிமையாளருமான, ஓசூர் சானந்திரம் வி.ஓ.சி., நகரை சேர்ந்த வெங்கடேஷ், 32, என்பவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசா-ரிக்கின்றனர்.
