/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.2.66 கோடியில் தார்ச்சாலை பணியை துவக்கி வைத்த அமைச்சர்
/
ரூ.2.66 கோடியில் தார்ச்சாலை பணியை துவக்கி வைத்த அமைச்சர்
ரூ.2.66 கோடியில் தார்ச்சாலை பணியை துவக்கி வைத்த அமைச்சர்
ரூ.2.66 கோடியில் தார்ச்சாலை பணியை துவக்கி வைத்த அமைச்சர்
ADDED : டிச 10, 2025 10:40 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், அகசிப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட மேலேரிக்கொட்டாய் பகுதியில், 2.66 கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பணிகளை துவக்கி வைத்து பின், தமிழக உண-வுத்துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறுகையில், ''கணவாய்பட்டி கோவில் முதல் மேலேரிக்கொட்டாய் சாலை வரை, 2.8 கி.மீ., துாரத்திற்கு மூலதன முதலீட்டிற்கான மாநிலங்-களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித்திட்டத்தில், 2.66 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கி-யுள்ளன.
இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது,'' என்றார்.தொடர்ந்து, துாய்மை பணியாளர்களுக்கு பரிசு மற்றும் சேலைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், திட்ட இயக்குனர் கவிதா, முன்னாள் எம்.எல்.ஏ., செங்குட்டுவன், தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர்
தட்ரஹள்ளி நாகராஜ், மாநில வர்த்தகரணி துணை செயலாளர் சீனி-வாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்-பாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்-டனர்.

