sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாலையில் வேகத்தடை வாகன ஓட்டிகள் கோரிக்கை

/

சாலையில் வேகத்தடை வாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலையில் வேகத்தடை வாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலையில் வேகத்தடை வாகன ஓட்டிகள் கோரிக்கை


ADDED : பிப் 06, 2025 05:23 AM

Google News

ADDED : பிப் 06, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மத்திகிரி கூட்ரோட்டில் இருந்து,

கொத்தகொண்டப்பள்ளியில் உள்ள டி.வி.எஸ்., கம்பெனிக்கு மாநில

நெடுஞ்சாலை செல்கிறது.

இச்சாலையில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, டிப்பர் லாரிகள், சரக்கு வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன. இச்சாலையிலுள்ள தனியார் பள்ளி அருகே, மிடுகரப்பள்ளி கிராமத்திற்கு செல்ல சாலை பிரிகிறது.

இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதில், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, சாலையை கடக்க முயற்சி செய்யும் பொதுமக்களும் காயமடைந்து வருகின்றனர்.

மிடுகரப்பள்ளி செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அப்பகுதியிலுள்ள யூ டர்னில் திரும்பும் போதுதான், விபத்து அதிகமாக நடக்கின்றன. தனியார் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர் மற்றும் அப்பகுதியிலுள்ள தேவாலயத்திற்கு வரும் மக்கள், விபத்தில் சிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே, மாநில நெடுஞ்சாலைத்துறை, மிடுகரப்பள்ளி பிரிவு சாலை அருகே, வேகத்தடை அமைக்க, வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us