ADDED : மே 31, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரிகை: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பேரிகையில், ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில், பொதுமக்கள் சார்பில் நேற்று தேசியக்கொடி பேரணி நடந்தது. பேரிகை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பகவான் என்பவரது தலைமையில், தேசியக்கொடியை ஏந்தியவாறு, பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர்.
தபால் அலுவலக சாலை, போலீஸ் ஸ்டேஷன் ரோடு, தேர்பேட்டை வழியாக சென்ற பேரணி, பேரிகை பழைய பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது.