sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மா.திறனாளிகளுக்கு தேசிய ஐ.டி., கார்டு வழங்கும் முகாம் நவ.,ல் துவக்கம்

/

மா.திறனாளிகளுக்கு தேசிய ஐ.டி., கார்டு வழங்கும் முகாம் நவ.,ல் துவக்கம்

மா.திறனாளிகளுக்கு தேசிய ஐ.டி., கார்டு வழங்கும் முகாம் நவ.,ல் துவக்கம்

மா.திறனாளிகளுக்கு தேசிய ஐ.டி., கார்டு வழங்கும் முகாம் நவ.,ல் துவக்கம்


ADDED : அக் 29, 2025 01:08 AM

Google News

ADDED : அக் 29, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள், சேவைகள் அரசு மருத்துவமனையில் வரும் நவ., முதல் நடக்கிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஒவ்வொரு மாதமும், முதல் மற்றும் 3வது வார புதன்கிழமைகளில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம்கள், சேவைகள், அரசு மருத்துவமனைகளில் நடக்கிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி பழையபேட்டையிலுள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையில், வரும் நவ., மாதம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் நடக்கிறது.

அதேபோல, 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நவ., மாதம் முதல் வாரந்தோறும் புதன்கிழமையன்று போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், முகாம்கள், சேவைகள் நடக்க உள்ளது.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us