/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரி தொகுதியில் 2ம் நாள் வேட்பு மனு தாக்கல் இல்லை
/
கி.கிரி தொகுதியில் 2ம் நாள் வேட்பு மனு தாக்கல் இல்லை
கி.கிரி தொகுதியில் 2ம் நாள் வேட்பு மனு தாக்கல் இல்லை
கி.கிரி தொகுதியில் 2ம் நாள் வேட்பு மனு தாக்கல் இல்லை
ADDED : மார் 22, 2024 07:12 AM
கிருஷ்ணகிரி : தமிழகம் முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக சாலை நுழைவுப்பகுதி, 200 மீட்டர், 100 மீட்டர் மற்றும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் என, 3 இடங்களில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முதல் நாளான நேற்று முன்தினம் ஒருவர் மட்டும், வேட்புமனு தாக்கல் செய்தார். 2ம் நாளான நேற்று, ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

