/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையில் குழாய் உடைந்து வீணாகிய ஒகேனக்கல் குடிநீர்
/
சாலையில் குழாய் உடைந்து வீணாகிய ஒகேனக்கல் குடிநீர்
சாலையில் குழாய் உடைந்து வீணாகிய ஒகேனக்கல் குடிநீர்
சாலையில் குழாய் உடைந்து வீணாகிய ஒகேனக்கல் குடிநீர்
ADDED : செப் 20, 2024 02:21 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சாலையில், குழாய் உடைந்து கடந்த, 3 மாதங்களாக ஒகேனக்கல் குடிநீர் வீணாகி வருகிறது.
கிருஷ்ணகிரி வெங்கடாபுரம் பஞ்., மேல்சோமார்பேட்டையில் சாலையின் நடுவில் செல்லும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய், கடந்த, 3 மாதங்களுக்கு முன்பு உடைந்தது. அன்று முதல் அதிலிருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் குடிநீர் வீணாகி அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்-பட்டுள்ளதோடு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலையில், மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டு சாலையும் சேதமடைந்து வரு-கிறது.இது குறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், '3 மாதங்களாக குழாய் உடைந்து, குடிநீர் வீணாகி வருகிறது. இதை, அதிகாரிகள் பலரும் பார்த்து விட்டு, போட்டோ மட்டும் எடுத்துச் செல்கின்-றனர். ஆனால், குழாய் உடைப்பை இதுவரை சரி செய்ய-வில்லை. பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள், இச்சாலை வழியாக தினமும் சென்று வரும் நிலையில், யாரும் கண்டு கொள்ளாமல் குழாய் உடைந்துள்ளதை சரி செய்யாமல், மெத்தன-மாக உள்ளனர்.
பொதுமக்களின் நலன்கருதி போர்க்கால அடிப்படையில், உடைந்த குடிநீர் குழாயை உடனே சரி செய்ய வேண்டும்' என்-றனர்.