/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு மருத்துவமனைக்கு மூதாட்டியின் உடல் தானம்
/
அரசு மருத்துவமனைக்கு மூதாட்டியின் உடல் தானம்
ADDED : நவ 08, 2025 03:50 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சத்தியபாமா வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, ஓசூரை சேர்ந்த சுதந்திரா, 78, என்பவர் கடந்த அக்., 16ல் இயற்கை மரணம் அடைந்தார். அவரது உடல், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு உடற்கூறியல் துறைக்கு தானமாக வழங்கப்பட்டது. இறந்த சுதந்திரா என்பவர், இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த, 1947 ஆக., 15 அன்று பிறந்தவர். இவரது கணவர் ராஜகோபாலன் ஏற்கனவே இறந்து-விட்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
சுதந்திரா இறந்த பின் தன் உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது. என் உடலை மருத்துவக்கல்லுாரி மாணவர்களின் செயல்-முறை பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என்று கூறி வந்-துள்ளார். அவரது விருப்பப்படி அவரின் உடலை மகன் பாஸ்கர் மற்றும் உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு ஒப்படைத்தனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

