sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீராணம் அருகே காத்திருக்கும் 'கள்ளக்குறிச்சி' விபரீதம் 24 மணி நேரமும் சாராயம் விற்பதாக மக்கள் புகார்

/

வீராணம் அருகே காத்திருக்கும் 'கள்ளக்குறிச்சி' விபரீதம் 24 மணி நேரமும் சாராயம் விற்பதாக மக்கள் புகார்

வீராணம் அருகே காத்திருக்கும் 'கள்ளக்குறிச்சி' விபரீதம் 24 மணி நேரமும் சாராயம் விற்பதாக மக்கள் புகார்

வீராணம் அருகே காத்திருக்கும் 'கள்ளக்குறிச்சி' விபரீதம் 24 மணி நேரமும் சாராயம் விற்பதாக மக்கள் புகார்


ADDED : ஜன 14, 2025 02:07 AM

Google News

ADDED : ஜன 14, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கள்ளச்சாராயம் மற்றும் சந்துக்கடை வைத்து மது விற்பதாக, தி.மு.க., நிர்வாகி மீது, ஊர் மக்கள் சார்பில், கலெக்டர் அலுவல-கத்தில் மனு அளித்தனர்.

சேலம் மாவட்டம் வீராணம் அருகே சுக்கம்பட்டியை சேர்ந்த ஊர் கவுண்டர் பழனிசாமி, 71, தலைமையில், 50க்கும் மேற்பட்ட மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். இது-குறித்து பழனிசாமி கூறியதாவது:

வீராணம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக, தி.மு.க., நிர்வாகி முருகன் உள்ளார். இவர் சுக்-கம்பட்டி பகுதியில் நான்கு இடங்களில் சந்துக்கடை மூலம் மது, கள்ளச்சாராயத்தை, 24 மணி

நேரமும் விற்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டால், 'போலீஸ் முதல் அரசியல் வரை செல்-வாக்கு படைத்தவன்; என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடி-யாது' என்று கூறி, மிரட்டல் விடுக்கிறார். பெண்கள் அந்த வழி-யாக

செல்ல முடியாமல், நீண்ட துாரம் நடந்து சென்று மாற்றி-டத்தில் பஸ் ஏறி செல்கின்றனர். தற்போதைய நிலையே தொடர்ந்தால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்-சாராயம் குடித்து, 70 பேர் இறந்தது போல், வீராணத்திலும் விப-ரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வீராணம் போலீசில் முருகன் மீது புகாரளித்தும் பலனில்லாத

நிலையில், மாவட்ட நிர்வாகத்தில் புகார் தெரிவித்துள்ளோம். இதன் பிறகும் நடவடிக்கை எடுக்கா-விட்டால், மக்கள் ஒன்று சேர்ந்து, உண்ணாவிரதம், மறியலில் ஈடு-படவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து முருகனிடம் கேட்டபோது, ''அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியில் என் மீது புகார் தந்துள்ளனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us