/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டுமனை பட்டா வழங்குவதில் முறைகேடு என மக்கள் போராட்டம்
/
வீட்டுமனை பட்டா வழங்குவதில் முறைகேடு என மக்கள் போராட்டம்
வீட்டுமனை பட்டா வழங்குவதில் முறைகேடு என மக்கள் போராட்டம்
வீட்டுமனை பட்டா வழங்குவதில் முறைகேடு என மக்கள் போராட்டம்
ADDED : டிச 11, 2025 06:32 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட, சுண்ணா-லம்பட்டி தரப்பு கலைஞர் நகர் பகுதியில், ஆதி திராவிடர் சமுதாய மக்களுக்கு, தமிழ்நாடு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, 200க்கும் மேற்-பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த அக்., மாதம் தமிழக முதல்வர், வீடு இல்லாத ஏழை,எளிய மக்களுக்கு, 85,000 பட்டா வழங்கப்படும் என்று அறிவித்தார். முதல் கட்டமாக சிலருக்கு பட்டாக்-களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதில், ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட சுண்ணா-லம்பட்டி தரப்பு கலைஞர் நகரில் வீடற்ற, நிலம் இல்லாத ஏழை, எளிய ஆதிதிராவிடர் மக்க-ளுக்கு, 150 இலவச வீட்டுமனை பட்டா வழங்க உத்தேசிக்கப்பட்டு, பயனாளிகள் தேர்வு நடந்தது.
இதில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தகுதியற்ற நபர்களுக்கும்,வெளியூர் நபர்-களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ளதை அறிந்த, ஊத்தங்கரை பகுதி மக்கள், கலைஞர் நகர் பகு-தியில் திரண்டனர். தங்களுக்கு, தகுதி இருந்தும் வழங்கவில்லை எனக்கூறி, 200க்கும் மேற்-பட்டோர் குடிசை அமைக்கும் போராட்டத்தை தொடங்கினர்.
அவர்களிடம் ஊத்தங்கரை இன்ஸ்-பெக்டர் முருகன், தாசில்தார் ராஜலட்சுமி ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவ-டிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைய-டுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

