/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் அவதி
/
அரூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் அவதி
ADDED : செப் 26, 2024 01:46 AM
அரூர்: அரூரில், நேற்று அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால், மக்கள் அவ-திக்கு ஆளாகினர்.தர்மபுரி மாவட்டம், அரூரில் கச்சேரிமேடு, திரு.வி.க., நகர், கோவிந்தசாமி நகர், 4 ரோடு, முருகர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை, 6:00 மணி முதல், அடிக்கடி மின் தடை ஏற்பட்டது.
அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பேக்கரியில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும், காலை நேர மின்தடையால் இல்லத்தரசிகள் மற்றும் பொது-மக்கள் அவதிக்கு
ஆளாகினர். கடந்த வாரமும் இதேபோல் அடிக்-கடி மின்தடை ஏற்பட்டது. எனவே, முறையாக மின்சாரம் வழங்க, மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க, பொது-மக்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.