/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி வாரச்சந்தை தொடர்ந்து 2வது வாரமாக 'வெறிச்'
/
போச்சம்பள்ளி வாரச்சந்தை தொடர்ந்து 2வது வாரமாக 'வெறிச்'
போச்சம்பள்ளி வாரச்சந்தை தொடர்ந்து 2வது வாரமாக 'வெறிச்'
போச்சம்பள்ளி வாரச்சந்தை தொடர்ந்து 2வது வாரமாக 'வெறிச்'
ADDED : ஜன 27, 2025 02:37 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூடுகிறது. கடந்த, 13ல் போகி தொடங்கி, பொங்கல், கரிநாள் என, 4 நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்-டாடப்பட்டது.
இதனால் கடந்த, 18ல் கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்தையில் மக்கள் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை. விற்பனை குறைவாக இருக்கும் என்பதால், அன்று கூடிய வாரச்சந்தைக்கு, 500க்கும் குறைவான ஆடு, மாடுகளை விற்பனைக்கு வியாபா-ரிகள், விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதனால் கடந்த, 18ல் கூடிய வாரச்சந்தையில் வியாபாரமின்றி வெறிச்சோடியது. இதனால் வியாபாரிகள் விரக்தியில் திரும்பிச் சென்றனர்.இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமையான நேற்று, வழக்-கம்போல் கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்தையில் காய்கறிகள், விவசாய பயன்பாட்டு பொருட்கள், தானியங்கள், ஆடு, மாடு, கோழிகளை விவசாயிகளும், வியாபாரிகளும் கொண்டு வந்தி-ருந்த நிலையில் கடந்த, 18ல் கூடிய வாரச்சந்தை போல் நேற்றும் பொதுமக்கள் பொருட்களை வாங்க, சந்தைக்கு வர ஆர்வம் காட்-டாததால், நேற்றும் வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து, 2வது வாரமாக வியாபாரம் இல்லாததால், வியாபா-ரிகள் கடும் விரக்தியில் பொருட்களை திரும்ப எடுத்துச் சென்-றனர்.