/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்தின்றி 'வெறிச்'
/
போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்தின்றி 'வெறிச்'
போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்தின்றி 'வெறிச்'
போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு ஆடுகள் வரத்தின்றி 'வெறிச்'
ADDED : செப் 22, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள், விவசாயிகள் அதிகளவு ஆடுகள், நாட்டு கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். கடந்த, 17-ல் புரட்டாசி மாதம் பிறந்தது. இம்மாதத்தில் பெரும்பாலான மக்கள் அசைவத்தை தவிர்ப்பர்.
இதனால் நேற்று கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு விவசாயிகள், வியாபாரிகள், 200க்கும் குறைவான ஆடுகளையே விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதனால், போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் வரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது.