sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

1.21 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்

/

1.21 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்

1.21 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்

1.21 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்


ADDED : ஜூன் 07, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், தமிழகத்தில் ஈஷா சார்பில், 1.21 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து துவங்கியது.

தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில், ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், கடந்த நிதியாண்டில், விவசாயிகள் மூலம் அவர்களது நிலங்களில், 1.36 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் மட்டும் நடப்பாண்டு, 1.21 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா, ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்தது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை பசுமையாக்கும் முயற்சியாக, 'பசுமை கிருஷ்ணகிரி' திட்டமும் துவங்கப்பட்டது.

காவேரி கூக்குரல் மற்றும் ஓசூர் நகர தன்னார்வலர்கள் இணைந்து, வரும் ஆண்டுகளில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரு கோடி மரங்கள் நட உள்ளனர். இத்திட்டத்தில் நடப்பாண்டில் மட்டும், 10 லட்சம் மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளது. 1.21 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, திரைப்பட நடிகர் கிட்டி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், முன்னாள் வனத்துறை அதிகாரி சுகதோ தத் ஆகியோர், மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தனர்.

காவேரி கூக்குரல் இயக்கம், தமிழகம் மற்றும் கர்நாடக மாநில விவசாய நிலங்களில். 242 கோடி மரங்களை நட திட்டமிட்டு செயல்படுகிறது. அதன்படி ஆண்டுதோறும் இலக்குகள் நிர்ணயம் செய்து, மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் கடந்தாண்டு, 1.21 கோடி மரக்கன்றுகள், விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளதாக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us