sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

காவேரிப்பட்டணம் ஜி.ஹெச்.,ல் பிரேத பரிசோதனை நடத்த கோரிக்கை

/

காவேரிப்பட்டணம் ஜி.ஹெச்.,ல் பிரேத பரிசோதனை நடத்த கோரிக்கை

காவேரிப்பட்டணம் ஜி.ஹெச்.,ல் பிரேத பரிசோதனை நடத்த கோரிக்கை

காவேரிப்பட்டணம் ஜி.ஹெச்.,ல் பிரேத பரிசோதனை நடத்த கோரிக்கை


ADDED : பிப் 06, 2025 05:24 AM

Google News

ADDED : பிப் 06, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தி.மு.க., மாவட்ட அமைப்புசாரா

ஓட்டுனரணி மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார், நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமாரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: காவேரிப்பட்டணம் சுற்றுவட்டாரத்தின், 36 கிராமங்களை சேர்ந்தவர்கள், காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அப்பகுதிகளில் விபத்து நடந்தால் அங்கேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் நடந்தன. மேலும், பிரேத பரிசோதனையும் அங்கேயே நடந்தது. கடந்த, 8 மாதங்களாக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடப்பதில்லை. இறந்தவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு போலுப்பள்ளியிலுள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்களை கூட, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். இதனால், இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, இது குறித்து விசாரித்து காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில், மீண்டும், பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், தி.மு.க., பிரமுகர் சீனிவாசன் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us