sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கோவிலில் விநாயகர் சிலை திருட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

/

கோவிலில் விநாயகர் சிலை திருட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

கோவிலில் விநாயகர் சிலை திருட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

கோவிலில் விநாயகர் சிலை திருட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்


ADDED : டிச 19, 2024 12:58 AM

Google News

ADDED : டிச 19, 2024 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, டிச. 19-

மத்துாரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள விநாயகர் சிலையை கடந்த, 4 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலைகோபி, நேற்று மத்துார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

விநாயகர் சிலை திருடப்பட்டது குறித்து மத்துார் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பழமையான கோவில்களில் உள்ள சுவாமி சிலைகளை, ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும் வேண்டும் என தொடர்ந்து இந்து முன்னணி போராடி வருகிறது. இந்நிலையில் இந்த விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது போன்ற பொக்கிஷங்களை பாதுகாக்க தவறிய அறநிலையத்துறையை கண்டிப்பதோடு, சிலை திருட்டு குறித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க, இந்து முன்னணி

வலியுறுத்துகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us