sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பாய்ந்த ஸ்கூட்டர்: கணவன் கண்ணெதிரே மனைவி பலி

/

பாய்ந்த ஸ்கூட்டர்: கணவன் கண்ணெதிரே மனைவி பலி

பாய்ந்த ஸ்கூட்டர்: கணவன் கண்ணெதிரே மனைவி பலி

பாய்ந்த ஸ்கூட்டர்: கணவன் கண்ணெதிரே மனைவி பலி


ADDED : செப் 30, 2025 01:46 AM

Google News

ADDED : செப் 30, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை அருகே, நாய் குறுக்கே வந்ததால், தம்பதி சென்ற ஸ்கூட்டர் நிலைதடுமாறி ஏரியில் பாய்ந்ததில், கணவன் கண்ணெதிரே மனைவி பலியானார்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் ஏபா நகர், 2வது தெருவை சேர்ந்தவர் அமானுல்லா, 48. இவர் மனைவி ஷமீம், 30. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வந்திருந்த இருவரும், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் ஆக்டிவா ஸ்கூட்டரில், வாணியம்பாடிக்கு புறப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, சிங்காரப்பேட்டை பெரிய ஏரிக்கரையின் மீது அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது, நாய் ஒன்று குறுக்கே வந்ததால், அமானுல்லா நிலைதடுமாறியதில், ஸ்கூட்டர் ஏரியில் பாய்ந்து இருவரும் நீரில் மூழ்கினர். அருகிலிருந்தவர்கள் அமானுல்லாவை காப்பாற்றினர். ஆனால் அவரது மனைவி ஷமீம் நீரில் மூழ்கினார். சிங்காரப்பேட்டை போலீசார் மற்றும் ஊத்தங்கரை தீயணைப்புத்துறையினர் வந்து ஒரு மணி நேரம் போராடி, ஷமீமை சடலமாக மீட்டனர். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us