/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
/
போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
ADDED : நவ 17, 2025 03:34 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, 800க்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரிகள், விவசா-யிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
அதேபோல், ஆடு-களை வாங்க கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலி-ருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். அதிகாலை முதல், ஆடுகள் வியாபாரம் மந்தமாக நடந்தது. வியாபாரத்திற்கு கொண்டு வரப்-பட்ட ஆடுகள் விற்பனையாகாமல், நேற்று காலை, 11:00 மணி வரை மந்தநிலையில் இருந்தது. இதனால் போச்சம்பள்ளி வாரச்-சந்தையில், 20 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோல், விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகளுடன் விவசாயிகள், வியாபாரிகள் திரும்பிச் சென்றனர்.

