ADDED : ஜூலை 10, 2026 04:43 AM
அ நிறம் | அளவு
பர்கூர்:பர்கூர்
பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று முன்தினம் வருவாய் துறையினர் வாகன சோதனை
மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் நின்ற ஒரு லாரியை
சோதனையிட்டதில், 2 யூனிட் அளவிலான உடைகற்கள் கடத்த முயன்றது
தெரிந்தது.
இது குறித்து, பர்கூர் வி.ஏ.ஓ., தமிழரசி செல்வி அளித்த
புகார் படி, பர்கூர் போலீசார், கற்களுடன் லாரியை பறிமுதல் செய்து, லாரி
உரிமையாளரான சாமந்தமலை தேன்குமார், 42, லாரி டிரைவர் மருதேப்பள்ளி
சதீஷ், ஆகிய இருவர் மீதும்வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
