sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் 2 மணி நேரம் நடனமாடிய மாணவியர்

/

கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் 2 மணி நேரம் நடனமாடிய மாணவியர்

கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் 2 மணி நேரம் நடனமாடிய மாணவியர்

கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் 2 மணி நேரம் நடனமாடிய மாணவியர்


ADDED : டிச 22, 2024 01:01 AM

Google News

ADDED : டிச 22, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில்

2 மணி நேரம் நடனமாடிய மாணவியர்

ஓசூர், டிச. 22-

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில் உள்ள ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில், மார்கழி உற்சவம் நடந்து வருகிறது. இதையொட்டி, கோவிலில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் கோவில் மண்டபத்தில் சலங்கை பூஜை நடந்தது. இதில், கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த வைஷ்ணவி நாட்டிய சாலா பள்ளியில் இருந்து வந்திருந்த பரத நாட்டிய கலைஞர்கள் மிதுன் ஷியாம் மற்றும் தீபிகா கோவிந்தராஜூலு ஆகியோரின் மாணவியரான சரண்யா மற்றும் தனுஸ்ரீ ஆகியோர், கோவிலில் நடந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று பரத நாட்டியம் ஆடினர். ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் சன்னதி முன் நடந்த சலங்கை பூஜையில், தொடர்ந்து, 2 மணி நேரம் பரத நாட்டியம் ஆடி இருவரும் சாதனை புரிந்தனர். இதன் மூலம் மாணவியர் இருவரும், பரத நாட்டிய பிரதம பிரவேச வகுப்பிற்கு தகுதி பெற்றனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us