sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பஸ் ஏற 3.5 கி.மீ., நடைபயணம் மாணவர்கள் கையெழுத்து இயக்கம்

/

பஸ் ஏற 3.5 கி.மீ., நடைபயணம் மாணவர்கள் கையெழுத்து இயக்கம்

பஸ் ஏற 3.5 கி.மீ., நடைபயணம் மாணவர்கள் கையெழுத்து இயக்கம்

பஸ் ஏற 3.5 கி.மீ., நடைபயணம் மாணவர்கள் கையெழுத்து இயக்கம்


ADDED : ஜூன் 19, 2025 01:25 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை அருகே, குந்துக்கோட்டை பஞ்., உட்பட்ட ஏணிபண்டை, வீரசெட்டி ஏரி கிராமங்களில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாததால், குந்துக்கோட்டை பஸ் ஸ்டாப்பில் இறங்கி, 3.5 கி.மீ., துாரம் நடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், உயர் கல்விக்காக வேறு ஊர்களுக்கு செல்கின்றனர்.

கல்லுாரி மாணவர்கள், தேன்கனிக்கோட்டை, ஓசூர் செல்ல வேண்டியுள்ளது. அவசர காலங்களில் மருத்துவமனை செல்ல சிரமம் ஏற்படுகிறது.வன விலங்குகள் அச்சுறுத்தல் உள்ள நிலையில், இரவு நேரங்களில் குந்துக்கோட்டையில் இறங்கி நடந்து வர பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே, பஸ் வசதி கேட்டு போக்குவரத்துத்

துறைக்கு மனு கொடுத்தும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் சார்பில், குந்துக்கோட்டை பஸ் ஸ்டாப்பில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேனர் வைத்து, அதில் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் நேற்று கையெழுத்து இயக்கம் நடத்தினர்.






      Dinamalar
      Follow us