sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பாரூர் பெரிய ஏரியில் செம்மண் கடத்தல் மக்கள் எதிர்ப்பால் தாசில்தார் விசாரணை

/

பாரூர் பெரிய ஏரியில் செம்மண் கடத்தல் மக்கள் எதிர்ப்பால் தாசில்தார் விசாரணை

பாரூர் பெரிய ஏரியில் செம்மண் கடத்தல் மக்கள் எதிர்ப்பால் தாசில்தார் விசாரணை

பாரூர் பெரிய ஏரியில் செம்மண் கடத்தல் மக்கள் எதிர்ப்பால் தாசில்தார் விசாரணை


ADDED : மே 09, 2025 02:52 AM

Google News

ADDED : மே 09, 2025 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட் டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் பெரிய ஏரியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் கிராவல் மற்றும் செம்மண் அள்ளப்பட்டு வருகிறது. அரசு விதிமுறையான இரண்டு முதல் மூன்று அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி அள்ள வேண்டும்., அதேபோல் காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரையும் ஜே.சி.பி., டிராக்டர்கள் பதிவெண்களை வைத்து அனுமதி பெற்று மண் எடுத்துச்செல்ல வேண்டும் என்பது விதி.

ஆனால் விதிகளை காற்றில் பறக்கவிட்டு, வெற்றிலைகாரனூர் பகுதியில், நேற்று விதிமுறை மீறி ஐந்து முதல், 10 அடி ஆழம் வரை ஆங்காங்கே குழி தோண்டி, மண் அள்ளுவதாகவும், அதேபோல் காலை, 8:00 மணி முதல் மண் அனுமதி பெறாக ஜே.சி.பி., டிராக்டர்களை கொண்டு கிராவல், செம்மண் கடத்துவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமாருக்கு மொபைல் போன் மூலம் புகார் தெரிவித்தனர். விசாரணை மேற்கொண்ட போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா கூறியதாவது:

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை நிரம்பி, தற்போது உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பாரூர் ஏரி இன்று மாலைக்குள் நிரம்பிவிடும் என்பதால் அனுமதி பெற்று கிராவல், செம்மண் எடுப்பவர்கள் காலை 8:00 மணிக்கு ஏரிக்கு சென்று மண் எடுத்துச்செல்வதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. விதிமீறிய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us