sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

காலி மதுபாட்டில் திரும்பப்பெறுவதற்கு எதிர்ப்பு டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

/

காலி மதுபாட்டில் திரும்பப்பெறுவதற்கு எதிர்ப்பு டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காலி மதுபாட்டில் திரும்பப்பெறுவதற்கு எதிர்ப்பு டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காலி மதுபாட்டில் திரும்பப்பெறுவதற்கு எதிர்ப்பு டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ADDED : டிச 19, 2025 06:51 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியிலுள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழக கிடங்கில், நேற்று டாஸ்மாக் சங்-கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், உள்-ளிருப்பு போராட்டம் நடந்தது.

டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'டாஸ் மாக் கடைகளில் உள்ள பாட்டில்களில், 10 ரூபாய் ஸ்டிக்கர் ஓட்ட இன்று(நேற்று) ஸ்டிக்கர்-களும், கணக்கு பதிவேடுகளும் வழங்க இருந்-தனர். இதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடக்கிறது. காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்திற்கு முறையான செயல்முறையை டாஸ்மாக் நிர்வாகம் உருவாக்காமல் கடை ஊழி-யர்களிடம் திணித்துள்ளது. ஏற்கனவே, வேலை சுமையால், கடுமையாக பாதித்துள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு, இது மேலும் கூடுதலான வேலை பளு திணிப்பதாக உள்ளது. மது பாட்டிலுக்கான தொகையோடு வசூலிக்கப்படும், 10 ரூபாயு-ம், திரும்பி வராத பாட்டிலுக்கான தொகையையும் டாஸ்மாக் எடுத்துக் கொள்கிறது. இதனால் ஊழி-யர்களும், நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கின் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்-டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்' என்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், டாஸ்மாக் மேலாளர் செங்கிஸ்கான் மற்றும் அலுவலர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மதியம், 3:00 மணியளவில் போராட்டத்தை கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us