sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மா.திறனாளிகள் நலத்துறை 150 பேருக்கு பணியாணை

/

மா.திறனாளிகள் நலத்துறை 150 பேருக்கு பணியாணை

மா.திறனாளிகள் நலத்துறை 150 பேருக்கு பணியாணை

மா.திறனாளிகள் நலத்துறை 150 பேருக்கு பணியாணை


ADDED : ஜூன் 17, 2025 01:40 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 302 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, நடந்த பேச்சு, கட்டுரை மற்றும் குறுஞ்சொற்றொடர் போட்டிகளில் வெற்றிபெற்ற, 15 மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பராமரிப்பு மறுவாழ்வு சேவைகள், ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 150 பணியாளர்களுக்கு பணி நியமண ஆணைகளை வழங்கினார்.

டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us