sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கரகம் எடுத்தவர் பாதம் தரையில் படாமல் செல்ல பக்தர்கள் வழிபாடு

/

கரகம் எடுத்தவர் பாதம் தரையில் படாமல் செல்ல பக்தர்கள் வழிபாடு

கரகம் எடுத்தவர் பாதம் தரையில் படாமல் செல்ல பக்தர்கள் வழிபாடு

கரகம் எடுத்தவர் பாதம் தரையில் படாமல் செல்ல பக்தர்கள் வழிபாடு


ADDED : பிப் 08, 2025 06:50 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, ஏ.சப்பானிப்பட்டியில் நடந்த காமாட்சி-யம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரி-சனம் செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள, ஏ.சப்பானிப்பட்-டியில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு தை மாத திரு-விழா கடந்த, 2ல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. கிரா-மத்தில் உள்ள மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்து வருதல், முரு-கனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட

பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தல் என ஒரு வாரமாக திருவிழா நடந்து வந்தது. விழாவின்

முக்கிய நாளான நேற்று, காமாட்சி-யம்மன் கரகத்தை பூலான் ஆற்றங்கரையில் சக்தி அழைப்பு

செய்-தபோது, அருள் வந்த பக்தர் மீது கரகத்தை வைத்து, கோவிலுக்கு அழைத்து சென்றனர்.அப்போது, கரகம் எடுத்து செல்பவர் பாதம் தரையில் படாமல் இருக்க, 1 கி.மீ., துாரத்திற்கு பக்தர்கள்

தரையில் சாஷ்டாங்கமாக படுத்து கொண்டனர். அவர்கள் மீது, அம்மன் கரகம் சுமந்தவர் நடந்து சென்றார்.

இதனால், குழந்தை பாக்கியம், நோய் பாதிப்பு விலகும், தொழில் வளர்ச்சி, நினைத்த காரியம் கைகூடும்

என்-பதால் இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வருகின்றனர். அதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில்

பக்தர்களுக்கு அருள் வாக்கு நடந்தது. ஏ.சப்பானிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி-களில் இருந்து

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்-தனர்.






      Dinamalar
      Follow us