/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காலபைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
/
காலபைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED : நவ 13, 2025 03:04 AM
கிருஷ்ணகிரி: தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவர் கோவில்களில், பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினர்.
கிருஷ்ணகிரி அருகே, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியி-லுள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை-யொட்டி சிறப்பு பூஜை நடந்தது.காலை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், காலபைர-வருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. தங்கக்கவச அலங்காரத்தில் கால-பைரவர் அருள் பாலித்தார். பகல், 12:00 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், ஏராளமான பெண்கள் பூசணி, தேங்காய் மற்றும் அகலில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடு-களை, 165 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் காலபைரவர் கோவில் மற்றும் சூரன் குட்டை தக்ஷ்ண கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.

