sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

 ஓசூர் அருகே கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மாணவனை கொல்ல முயன்ற இருவர் கைது

/

 ஓசூர் அருகே கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மாணவனை கொல்ல முயன்ற இருவர் கைது

 ஓசூர் அருகே கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மாணவனை கொல்ல முயன்ற இருவர் கைது

 ஓசூர் அருகே கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மாணவனை கொல்ல முயன்ற இருவர் கைது


ADDED : டிச 11, 2025 05:13 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர், 16 வயது சிறுவன். இவர், அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமியை காதலித்து, சமீபத்தில் வீட்டிலிருந்து அழைத்து சென்றார். ஓசூர் மகளிர் போலீசார் சிறுவனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

ஜாமினில் வந்த சிறுவன், சிறுமியுடன் தொடர்ந்து மொபைல்போனில் பேசி வந்துள்ளார்.

இதனால், சிறுவனை, சில நாட்களுக்கு முன், சிறுமியின் உறவினரான செல்லதுரை, 56, தரப்பினர் அடித்துள்ளனர்.

இதையறிந்த சிறுவனின், 13 வயது தம்பியான, அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன், டிச., 8ம் தேதி, செல்லதுரை நடத்தி வரும் ஸ்வீட்ஸ் கடைக்கு சென்று, தன் அண்ணனை எவ்வாறு அடிக்கலாம் என கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த செல்லதுரை தரப்பினர், கொதிக்கும் எண்ணெயை மாணவன் மீது ஊற்றினர்.

இதில், இடது கையில் காயமடைந்த மாணவன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

மாணவனின் தாய் புகாரின்படி, செல்லதுரை உட்பட இருவரை ஓசூர் டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us