ADDED : டிச 25, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அருகே, பெத்தனப்பள்ளியை சேர்ந்தவர் நாராயணப்பா மனைவி லட்சுமியம்மா, 70. நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, ஓசூர் - பெங்களூரு சாலையில் நடந்து சென்றார். அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். ஓசூர் சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
சூளகிரி அடுத்த ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 17. சூளகிரி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று மாலை, 5:30 மணிக்கு, சூளகிரி மீனாட்சி திருமண மஹால் பகுதியில், ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை ஓட்டி சென்றார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் சென்ற வேலு, 24, என்பவர் படுகாயமடைந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.