/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு
/
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு
ADDED : டிச 13, 2024 09:03 AM
கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 281 கன அடியாக இருந்த நீர்-வரத்து நேற்று, 338 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில் நேற்று, 40.34 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணையிலிருந்து, 281 கன அடி நீர் திறக்கப்பட்-டுள்ளது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, நேற்று முன்தினம், 541 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 395 கன அடியாக சரிந்தது. அணையிலி-ருந்து, 331 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 51.15 அடியாக நீர்மட்டம் இருந்தது.
ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு நேற்று, 2வது நாளாக நீர்வரத்து, 560 கன அடியாக இருந்-தது. அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணை மொத்த உயரமான, 19.60 அடியில் நேற்று, 17.18 அடியாக நீர்மட்டம் இருந்தது.