/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கர்நாடக பக்தர்களுக்கு தமிழக எல்லையில் வரவேற்பு
/
கர்நாடக பக்தர்களுக்கு தமிழக எல்லையில் வரவேற்பு
ADDED : பிப் 08, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கர்நாடகா மாநிலம், மைசூருவில் இருந்து கோவை வெள்ளியங்-கிரி மலைக்கு, 32 ஆண் பக்தர்கள், 5 பெண் பக்தர்கள் என, 37 பேர், ஆதியோகி சிலையுடன் கூடிய சிறு ரதத்துடன் கடந்த மாதம், 19ல், பாத யாத்திரையை துவங்கினர். தமிழக எல்லை-யான பேரிகை அருகே, கே.என்.தொட்டி மற்றும்
பி.எஸ்.திம்மசந்-திரம் ஆகிய கிராமங்களுக்கு நேற்று வந்தடைந்தனர். அவர்க-ளுக்கு, ஓசூர் ஈஷா
யோகா மைய நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பேரிகை, அத்திமுகம், செட்டிப்பள்ளி
வழியாக, சூளகிரி அருகே உள்ள புட்டலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்-றனர். அங்கு இரவு தங்கி
விட்டு, இன்று (பிப்., 8) மீண்டும் பாத யாத்திரையை துவங்க உள்ளனர்.