/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.4.63 லட்சத்தில் நல உதவி
/
தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.4.63 லட்சத்தில் நல உதவி
தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.4.63 லட்சத்தில் நல உதவி
தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.4.63 லட்சத்தில் நல உதவி
ADDED : நவ 18, 2025 01:40 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 399 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
அவற்றில் தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க, கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார். தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை சார்பில், 6 கட்டுமான தொழிலாளர்களுக்கு, 4.63 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோபு, துணை கலெக்டர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

