sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் ஓசூர் மேம்பாலம் அமைக்க அரசு முயற்சிக்குமா?

/

போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் ஓசூர் மேம்பாலம் அமைக்க அரசு முயற்சிக்குமா?

போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் ஓசூர் மேம்பாலம் அமைக்க அரசு முயற்சிக்குமா?

போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் ஓசூர் மேம்பாலம் அமைக்க அரசு முயற்சிக்குமா?

1


ADDED : டிச 26, 2024 05:56 AM

Google News

ADDED : டிச 26, 2024 05:56 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : தமிழக எல்லையான ஓசூர் நகரம் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால், வேகமாக வளர்ந்து வருகிறது. நகர் பகுதியில் மட்டும், 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில், ஓசூர் பகுதியில் சாலை வசதிகள் இல்லை

இதனால் நகர் பகுதியில் உள்ள பழைய பெங்களூரு சாலை, தாலுகா அலுவலக சாலை, பாகலுார் சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, ராயக்கோட்டை சாலை, தளி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தற்போது தளி சாலை, மத்திகிரி கூட்ரோடு - பேலகொண்டப்பள்ளி சாலை விரிவாக்கம் செய்யப்படுகின்றன. ஓசூர் இன்னர் ரிங்ரோடு, ராயக்கோட்டை சாலை போன்றவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

அதனால், இச்சாலைகளில் செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளன. இந்நிலையில், ஓசூரில் உள்ள தளி சாலை ரயில்வே கேட் பகுதியில், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.

மாநில நெடுஞ்சாலைத்துறை தயாராக இருந்தும், ரயில்வே துறை ஒத்துழைக்காததால், பாலம் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது.

ரிங்ரோட்டில் உள்ள பவானி பேலஸ் திருமண மண்டபத்தில் இருந்து, தனியார் கூரியர் நிறுவனம் வரை, உயர்மட்ட பாலம் அமைக்க மாநில அரசிற்கு நெடுஞ்சாலைத்துறை பரிந்துரை செய்தும் நிதி ஒதுக்கப்படவில்லை.

அதனால் ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில்ரிங்ரோடு சந்திக்கும் ஆர்.சி., சர்ச் அருகே கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

அதேபோல, ஓசூர் - ராயக்கோட்டை சாலையில் ரிங்ரோடு சந்திக்கும் அசோக் பில்லர் பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுமட்டுமின்றி, மத்திகிரி கூட்ரோடு, அந்திவாடி கூட்ரோட்டில் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், நான்கு மூலைகளில் இருந்து அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது.

மேலும், 9 பஞ்.,க்கள் மாநகராட்சியுடன் இணைய உள்ளன. அதனால், ஓசூர் நகரில் முக்கிய சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்க வேண்டியது கட்டாயமாக ஏற்பட்டு உள்ளது. இல்லாவிட்டால், ஓசூர் நகரம் கடும் போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் நிலை உருவாகும்.






      Dinamalar
      Follow us